புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, July 31, 2009

சேவல் கூவிய பொழுது

அதிகாலையொன்றில்
அடிவயிறு வலிக்க
உயிர்போக அலறி
வியர்த்துக் கொட்டி
வெந்தயம் மென்னு
தொப்புளில் சுண்ணாம்புதடவி
காளீஸ்வரி
கருப்பு கலரில்
வலியடங்கி
கைலி சுருட்டி
மீண்டும் துங்கிப்போன
அந்த நிமிடங்கள்
நான் வயசுக்குவந்த
தருணமாக இருக்கலாம்.

- ஞானசேகர்

Wednesday, July 29, 2009

அணையும்யா நெருப்பு

காதல், சிகரெட் போல. உதட்டில் வைத்து ஆயிரம் முத்தம். கடைசியில் காலில் போட்டு ஒரே மிதி.
- யாரோ


பற்ற வைத்தேன்
பார்த்துவிட்டாள்
அணைத்து விட்டேன்.

- ஞானசேகர்

உலகியற்றியான்

தாழ்வாரம் இல்லை
தனக்கொரு வீடில்லை
தேவாரம் எதற்கடி?
- யாரோ


கல்லினுள் வாழும் தேரைக்கும்
கருப்பை உயிருக்கும்
சோறு போட்டு
விதர்பா விவசாயியைத்
தூக்கில் போட்டவன்.

- ஞானசேகர்

Saturday, July 18, 2009

ஒத்திகை

பரிட்சயமில்லாதவர்கள்
சந்தித்துக் கொண்டதொரு கூட்டத்தில்
எனக்கு முன்னால்
அறிமுகம் செய்தவனின்
முகம்கூட நினைவில்லை.

- ஞானசேகர்