புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, June 30, 2012

மக்களால் மக்களுக்காக மக்களே

அந்தப்புரங்களில்
இடஒதுக்கீடு செய்தது
முடியாட்சி.

ஆட்சிமன்றங்களில்
இடஒதுக்கீடு செய்கிறது
மக்களாட்சி.

- ஞானசேகர்

கணித்தான் பூங்குன்றன்


வாசலில் எனக்கு
சார் சொல்லி
வணக்கம் வைக்கும்
செக்யூரிட்டியும்

ஏசி அறையில்
நான் பெயர் சொல்லி
கை குலுக்கும்
மேலதிகாரியும்

என்னைவிட
த்துவது மூத்தர்கள்.


சிறியோரை இகழ்தலும் இலமே
பெரியோரை வியத்தல் அதனினும் இலமே.

ஞானசேகர்

சந்தை


எதையும்
எவரிடமும்
எப்படியும்
விற்றுவிட‌
சொல்லித்தரும் புத்தக‌ம்
விற்கப் படாமல் கிடக்கிறது.


- ஞானசேகர்