புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, February 20, 2016

666

அவையில்
அம்மணமாக ஓடினான்

அரண்மனை கட்ட
பிறன்மனை இடித்தான்

போட்டிகள் நடத்தி
பரிசுகள் பெற்றான்

தலைநகர் தகிக்க‌
இசையில் சுகித்தான்

கடவுள் ஒருவனே
அவனே தான் என்றான்

வணங்காதோரை
வாணலியில் வாட்டினான்

பிறமதம் மிதித்தழி
சம்மதம் சொன்னான்

இரவுகள் ஒளிர‌
வனங்கள் எரித்தான்

நகரம் கட்டி
நரகம் காட்டினான்

போதாது இக்குற்றச்சாட்டுகள்

உங்கள் ஆட்சியாளர்கள்
செய்யாத ஒன்றை
அவனிடம் காணும்வரை
தயவுசெய்து நீரோவைப் பழிக்காதீர்கள்.

- ஞானசேகர்