புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, August 23, 2016

ஆசிர்வாதக் கூட்டங்கள்

அடிவாரத்தில் தவமிருக்கும்
99 செம்மறிகளைப் பட்டினியிட்டு
ஒற்றையாட்டைத் தோளில் தூக்கி
கொஞ்சிக் குதித்து ஆர்ப்பரித்து
ஒளிவட்டத்துடன் வலம் வருவர்
ஒலிவமலை உச்சியில் இறைவனும்
ஒலிம்பிக் கடைசியில் இந்தியரும்.

- ஞானசேகர்

No comments: