புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, January 18, 2018

சுடப்படும் வெண்சங்கு

பாருங்கள் இந்தப்
பகுத்தறிவுப் பகலவன் யோக்கியதை!
வீட்டை விட்டு ஓடிப் போனவனை
முதலில் தேடி இருக்கிறார்கள் தாசிகளின் வீட்டில்!

அவர் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்
சாமிகளை எதிர்த்த ஈரோடு இராமசாமியைத் திட்டியும்
சாமிகளைச் சொல்லி காந்தியைக் கொன்றவர்களைப் பாராட்டியும்!

நீங்களும் அவரைச் சந்திக்க நேர்ந்தால்
தயவுசெய்து ஞாபகப்படுத்துங்கள்:

தாசிகள் வீடெல்லாம் தேடினார்கள்
பெரியார் அங்கில்லை
காசிக்குப் போயிருந்தார்

காந்தியைக் கொல்லப் போன ஒருவன்
காரியம் முடிந்தவுடன்
காசிக்குப் போகவில்லை
தாசி வீட்டில் பிடிபட்டான் என்று.

- ஞானசேகர்

No comments: